ஊரடங்கு உத்தரவை பகுதியளவு தளர்த்தலாம்-சரத்பவார் யோசனை

0 5090

கொரோனா பாதிக்கப்படாத குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தலாம் என மத்திய அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் யோசனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடனான கலந்துரையாடலில் பேசிய சரத்பவார் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை, சீர் செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு இப்போதிருந்தே தொடங்க வேண்டும் என சரத்பாவர் கேட்டுக்கொண்டுள்ளார். மாநிலங்களின் வருவாயை அதிகரிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ள சரத்பவார், கொரோனா தொடர்பாக எந்தவொரு சமூகத்தை குறைகூறுவது சரியானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments