ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி
பிரேசிலுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்த இந்தியாவுக்கு அந்நாட்டு அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி உதவ வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் பிரேசில் அதிபர் ஜைர் போல்சோனாரோ கேட்டுக்கொண்டார்.
அதில் ராமாயணத்தில் மூலிகைகள் அடங்கிய மலையை அனுமன் தூக்கி வந்து லட்சுமணனைக் காப்பாற்றியதை மேற்கோள் காட்டியிருந்தார். இந்நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை தயாரிப்புக்கான மூலப்பொருட்களை பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரேசில் அதிபர், உரிய காலத்தில் செய்த உதவிக்குப் பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
Comments