போலீசாரின் ட்ரோன் கேமராவை பார்த்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்த தாயம் விளையாட்டு வீரர்கள்..!

0 3123

காஞ்சிபுரம் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்த போது சாலையில் கும்பலாக தாயம் விளையாடியவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா பாதிக்கப்பட்டவர் வசித்து வந்த பகுதி கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கப்பட்டு 65 தெருக்கள் இரும்பு தகரத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள மக்கள் தடுப்பு வேலியை தாண்டி வரவும் வெளிநபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்த போது சிக்கிய காட்சிகள் இவை

அவர்கள் எந்தெந்த வீடுகளைச் சேர்ந்தவர்கள் என அறியும் வரை அனைவரையும் டிரோன் கேமரா விரட்டிச் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments