மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

0 2194

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவரும், மு.க.ஸ்டாலினும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். மேலும் மு.க. ஸ்டாலினிடம் அவரது தாயார் தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்தும் மோடி விசாரித்தார். பிரதமருடன் பேசியபோது, வரும் 8ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சிகளின் கூட்டத்துக்கு திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதேபோல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments