கொரோனா தடுப்புக்கு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ரூ.1.25 கோடி நன்கொடை

0 1886

கொரோனா தடுப்பு பணிக்காக தெலுங்கு திரைப்பட நடிகர் பாலகிருஷ்ணா ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. அரசின் பணிகளுக்கு நிதி வழங்கும்படியும் மக்களை பல்வேறு மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன. இதையேற்று ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் ரூபாயை பாலகிருஷ்ணா நன்கொடையாக அளித்துள்ளார்.

இதேபோல் தெலுங்கு திரைப்படத் துறை ஊழியர்களின் அறக்கட்டளைக்கும் அவர் 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments