தப்லீக் ஜமாத் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை - ஆந்திர துணை முதலமைச்சர்

0 2619

டெல்லி நிசாமுதீன் மர்க்காசில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என ஆந்திரத் துணை முதலமைச்சர் அம்ஜத் பாஷா தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நிசாமுதீன் மர்க்காசில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய நிலையில் அவர்களில் பலருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திரத் துணை முதலமைச்சர் அம்ஜத் பாஷாவும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பியதாகத் தெலுங்கு தேசக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதை மறுத்துள்ள அவர், மதம் தொடர்பான எந்தக் கூட்டத்திலும் தான் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குத் தொடர்பாகவே தான் டெல்லி சென்றதாகவும், அங்கு ஆந்திர பவனில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments