பணிமனையில் நின்றிருந்த 6 அரசு பேருந்துகள் எரிந்து நாசம்

0 4613

புதுக்கோட்டையில் பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6 அரசு பேருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன.

144 தடை உத்தரவு காரணமாக பேருந்துகள் இயங்காத நிலையில், புதுக்கோட்டையில் உள்ள பணிமனையில், 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஒரு பேருந்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால், அங்கு நின்றிருந்த மேலும் 5 பேருந்துகளும் எரிந்து நாசமாகின.

தீயணைப்பு துறையினர் வந்து, தீயை அணைத்ததால் மற்ற பேருந்துகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments