ஹூபே-ஊகானுக்கு 2 மாத ஊரடங்குக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் தளர்வு

0 3147

கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவியதாக கருதப்படும் ஹூபே மாகாணத்தின் தலைநகரான ஊகானில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை சீன அரசு தளர்த்தியுள்ளது.

இப்பகுதியில் இரண்டு மாத காலம் ஊரடங்கு மூலம் கொரோனா பரவுவது தடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளும் குணமாகி வீடு திரும்புகின்றனர். புதிய நோய் குறித்த தகவல்களும் இல்லை .இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் ரயில்கள் பேருந்துகள், விமானங்கள் இயக்கப்படுகின்றன. சீனாவின் இதர பகுதிகளில் இருந்து ஊகானுக்கு செல்லலாம் என்ற போதும் மறு உத்தரவு வரும் வரை திரும்பி வர இயலாது என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments