மீண்டும் விற்பனையை தொடங்கிய பிளிப்கார்ட் நிறுவனம்..!

0 3717

ஆன்லைன் பொருள்கள் விற்பனை விநியோகத்தை பிளிப்கார்ட் மீண்டும் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அமேசான் நிறுவனம் முதலில் தனது விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதையடுத்து பிளிப்கார்ட் நிறுவனமும், தனது விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இருப்பினும் நேற்று மாலை முதல் மீண்டும் மளிகை பொருள்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பொருள்கள் விற்பனை விநியோகத்தை பிளிப்கார்ட் தொடங்கியுள்ளது. அமேசான் நிறுவனம் தரப்பில், அத்தியாவசிய பொருள்கள் விநியோகத்தை தொடங்குவது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments