ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

0 15896

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு வார்ததை நடத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள கடும் உயிர்ச்சேதம் குறித்து வருத்தமும் வேதனையும் தெரிவித்த பிரதமர் மோடி பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

ரஷ்ய அரசின் தீவிரமான முயற்சிகளால் அந்நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்தார். இரு தலைவர்களும் இந்நோயால் ஏற்பட்டுள்ள உலகளாவிய சவால்கள், பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆலோசித்தனர்.

சுகாதாரம் ,மருத்துவம், அறிவியல் ஆய்வு, மனிதநேய நடவடிக்கைகளை அதிகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments