முதல் வாரம் மோசமாக உணர்ந்தேன்..! இரண்டாவது வாரம் காய்ச்சல் நீங்கியது..! ஜேம்ஸ் பாண்ட் நாயகி கொரோனா அனுபவம்

0 18854

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி தன்னுடைய அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்  பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் தாக்கத்திற்கு உலகின் முக்கிய பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த வகையில் பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஜேம்ஸ் பாண்ட் நடிகை ஓல்கா குர்லென்கோ சமீபத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் நோய் தாக்கத்திலிருந்து மீண்டு வந்த அவர் கொரோனா குறித்த தன்னுடைய அனுபவத்தை சமூக வளைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

image

அதில் முகமூடி அணிந்துகொண்டு தனது மகனுடன் நெருப்பின் முன் அமர்ந்த படி புகைப்படத்தை பதிவிட்டு “நான் தற்போது முழுமையாக குணமடைந்து விட்டேன். முதல் ஒரு வாரம் மிகவும் மோசமாக உணர்ந்தேன்.

View this post on Instagram

Happy Mother’s Day! #mothersday P.S. I have completely recovered ? To recapitulate: For one week I felt pretty bad and was mostly in bed, sleeping, with high fever and strong headache. The second week, the fever was gone but some light cough appeared and I felt very tired. By the end of the second week I felt totally fine. Cough is almost gone although I still cough in the mornings but then it completely goes away for the day! I’m fine! And now I’m just enjoying this time to reflect on many things and spend my time with my son. ? Я думаю я полностью выздоровела. Коротко о течении болезни: В первую неделю мне было очень плохо и я почти все время лежала с высокой температурой и много спала. Я спала 12 часов за ночь и потом ещё часа 3-4 днём!!! Подняться было тяжело. Усталость сумасшедшая. Головная боль дикая. Во вторую неделю температура полностью ушла и появился легкий кашель. Усталость осталась. Теперь практически никаких симптомов нет. Только немного кашель есть по утрам, но потом он полностью уходит на весь день. Теперь я наслаждаюсь отдыхом и провожу время с сыном. Держитесь!!! ? #coronavirus #коронавирус

A post shared by Olga Kurylenko (@olgakurylenkoofficial) on

பெரும்பாலும் படுக்கையிலேயே இருந்தேன், அதிக காய்ச்சலுடனும், கடுமையான தலைவலியுடனும் அவதிப்பட்டேன், அடுத்த இரண்டாவது வாரம் காய்ச்சல் நீங்கியது, ஆனால் லேசாக இருமல் மட்டும் இருந்தது, மிகவும் சோர்வாக உணர்ந்தேன், இரண்டாவது வாரத்தின் இறுதியில் முற்றிலும் நன்றாக உணர்ந்தேன்" என கொரோனா பற்றிய தன் அனுபவத்தை மிகவும் உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டு இருந்தார்.

மேலும் தற்போது நலமாக இருப்பதாகவும், தனது மகனுடன் தனது நேரத்தை அதிகமாக செலவிடுவதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 16 அன்று நடிகை ஓல்கா குர்லென்கோவிற்கு கொரோனா பாதிப்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments