மருந்து உற்பத்தி & விநியோகம் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்க - மோடி

0 1276

மருந்துகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும்படி, மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவிலுள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மோடி வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், கொரோனாவை எதிர்க்கும் சவாலில் மருந்து உற்பத்தியாளர்களும், விநியோக நிறுவனங்களும் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மருந்துப் பொருட்களின் விநியோகத்தை சீராக வைத்திருக்க அரசு எல்லா வகையிலும் உதவும் எனவும், அவசியமான மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் உற்பத்தியை உறுதிசெய்வதற்காக, ரூபாய் பதினான்காயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments