கொரோனா பாதிப்பை ஈடுகட்ட மத்திய அரசின் நிவாரண நிதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்...

0 1626

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன.

இழப்பை ஈடுகட்ட பிரதமர் அறிவித்த பொருளாதார மீட்பு நடவடிக்கையின் கீழ், நிவாரண நிதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விமானப் போக்குவரத்துத் துறை , சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிர்மலா சீதாராமன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிதித்துறை செயலர் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் உள்ளிட்டோருடன் விரிவான ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிவித்தார். இன்றும் நிதியமைச்சக அதிகாரிகளுடன் நிவாரணம் அறிவிப்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments