டாஸ்மாக்கில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க வித்தியாசமான முயற்சி

0 10946

ஈரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் மது வாங்குவோருக்கு இடையே கொரோனா தொற்று பரவாமல் இருக்கும்பொருட்டு குறிப்பிட்ட இடைவெளி விட்டு வரிசையில் நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் டாஸ்மார்க் கடைகளில் மதுபிரியர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாததால் மொடக்குறிச்சியிலிருந்து குளூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக்கில் புது முயற்சியை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, வாடிக்கையாளர்கள் ஒருவரை ஒருவர் தொட்டாத வகையில் பத்தடி இடைவெளியில் போடப்பட்டகோட்டுக்குள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments