தனியார் நிறுவன ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதிக்க மத்திய அரசு யோசனை

0 11033

தனியார் நிறுவன  ஊழியர்களை, முடிந்த அளவுக்கு வீடுகளில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்துமாறு, மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

புதுடெல்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை செயலாளர் லாவ் அகர்வால் , மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர், வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டினார். 

கொரோனாவில் இருந்து தப்பிக்க  தனித்திருத்தல் மிகவும் அவசியம் என அறிவுறுத்திய அவர், நாடு முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் முக கவசம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments