நிர்பயா வழக்கு-குற்றம் நடந்தபோது தான் சிறுவன் என்ற பவன்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

0 2964

தூக்குதண்டனையை ரத்துசெய்யக்கோரி நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான பவன்குமார் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகள் 4 பேரையும் நாளை அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டுளது. இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவனான பவன்குமார், தாக்கல் செய்த சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில், குற்றம் நடந்தபோது தான் சிறுவன் என்றும், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments