இத்தாலியிலிருந்து ராஜஸ்தான் திரும்பிய தம்பதியினருக்கு கொரோனா

0 1419

ராஜஸ்தானில் பெற்றோர் மற்றும் 3 வயது குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர் தங்கள் 3 வயது குழந்தையுடன் கடந்த 10 நாட்களுக்கு முன் இத்தாலியில் இருந்து ராஜஸ்தான் திரும்பினர். இதையடுத்து அவர்களை பரிசோதனைக் உட்படுத்தியபோது மூவருக்கும் கொரோனா தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்தக் குடும்பத்தினர் இருக்கும் ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டார அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments