உ.பி.யில் 8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்..!

0 2069

உத்தரப் பிரதேச அரசு ஆரம்ப நிலை பள்ளிகளில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யும்படி அந்த மாநில அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இம்மாதம் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆரம்பநிலை பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இறுதி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை சுட்டிக்காட்டி, ஏப்ரல் 2ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் திட்டமிட்டபடி தேர்வு நடத்த முடியாத நிலை நேரிட்டுள்ளதையடுத்து, தேர்வு எழுதாமலேயே அனைத்து மாணவர்களையும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அடைய செய்யும்படி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments