நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்று தூக்கு தண்டனை ஒத்திகை

0 3549

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு நாளை மறுநாள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில், அதற்கான ஒத்திகை இன்று நடைபெறவுள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ்குமார் சிங், அக்சய்குமார் சிங், வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகிய நால்வருக்கும் நாளை மறுநாள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில், இதற்கான முன் ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்துவருகிறது.

தூக்கில் போடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளரான உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பவன் ஜல்லத் என்பவர், இதற்கான ஒத்திகையை இன்று நடத்தவுள்ளார். நாளை மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments