கொரோனா முன்னெச்சரிக்கையாக தியாகராயநகர் பகுதியில் பெருவணிக நிறுவனங்களை மூட உத்தரவு

0 1901

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியாகராயநகரில் இயங்கும் பெருவணிக நிறுவனங்கள் அனைத்தையும், மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

நோய் தொற்றை தடுக்க பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் அனைத்து பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைத்தாலும், தியாகராயநகர் போன்ற ஒரு சில பகுதிகளில் மட்டும் அதிகளவில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

இதையடுத்து பெரு வணிக நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ள மாநகராட்சி, அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து, உணவகம் போன்றவற்றை விற்பனை செய்யும் அனைத்து சிறு கடைகளும் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments