நோய் கண்காணிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவு

0 1138

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நோய் கண்காணிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அண்டை மாநிலங்களில் இருந்து வரும் மக்களை எல்லையோர சுங்கசாவடிகளில் வைத்தும், ரயில் பயணிகளை ரயில் நிலையங்களில் வைத்தும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.தனியார் மற்றும் அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், பொதுகழிப்பறைகள் ஆகியவை கிருமி நாசினி மூலம் தினமும் சுத்தம் செய்வதுடன், கூடுதல் சுகாதார நடவடிக்கையும் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments