தாஜ்மகாலை மூட உத்தரவு

0 1434

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மகால் மூடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் தாக்குதலுக்கு இந்தியாவில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாசகாரக் கிருமியின் வேகத்தைக் கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியங்களையும் மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றானதும், உலக அதிசயங்களில் முக்கியமானதுமான தாஜ்மகால் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பார்வையாளர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments