கொரோனா பரவலைத் தடுக்க யோசனை சொன்னால் ஒரு லட்சம் பரிசு

0 3006

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் யோசனைகளைக் கூறினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளதால் அதனை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யோசனைகளை அளிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு ஆரோக்கியமான உலகத்திற்காக புதிய யோசனைகளை பயன்படுத்த நினைப்பதாகவும், நிறைய பேர் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தொழில்நுட்பம் சார்ந்த யோசனைகளை வழங்கி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார். அவ்வாறு ஆலோசனைகளை வழங்குபவர்கள் பிரதமர் அலுவலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் டுவிட்டரில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments