நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 3 பேர் சர்வதேச நீதிமன்றத்தில் மனு

0 8557

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரில் மூன்று பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் சிங், அக்சய் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு, வருகிற 20ஆம் தேதி, அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆயத்தப் பணிகள், டெல்லி திஹார் சிறையில் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. உச்சநீதிமன்றத்திலும், குடியரசு தலைவரிடத்திலும், மாறி, மாறி மனுக்களை தாக்கல் செய்தபோதும், அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துவிட்டன.

இதனால், தூக்கு உறுதியாகிவிட்ட நிலையில், அக்சய் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர் தங்களது தண்டனையை நிறுத்திவைக்க கோரி பன்னாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments