பள்ளியை சுத்தம் செய்யும் ராணுவ வீரர்கள்

0 1250

தென்கொரியாவில் சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற இருக்கும் பள்ளி ஒன்றை கிருமி நாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யும் பணியில் அந்நாட்டின் இராணுவ வீரர்கள்  ஈடுபட்டனர்.

அந்நாட்டில் கொரோனாவால்  75 பேர் உயிரிழந்த நிலையில், 8 ஆயிரத்து 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டிகு ((DAEGU)) எனும் நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் வரும் நாட்களில் சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற இருக்கிறது.

இதனை முன்னிட்டு அப்பள்ளியில் கிருமிநாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யும் பணியில் அந்நாட்டின் இராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

உடல் முழுவதும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்தவாறு பணியில் ஈடுபட்ட அவர்கள், அங்கிருந்த மேசைகள், நாற்காலிகள் என அனைத்தையும் சுத்தம்செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments