கொரானா எதிரொலி: தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு
கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்கானாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் போன்றவற்றை வரும் 31-ம் தேதி வரை மூடுவதற்கு, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், தனியார் பயிற்சி மையங்களும் மூடப்பட வேண்டும் எனவும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏற்கனவே அறிவித்தபடி அனைத்து வகுப்புகளுக்குமான பொதுத்தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுக்கூட்டம், கருத்தரங்கு, பேரணி, பொருட்காட்சி, கலை நிகழ்சிகள் போன்றவற்றை நடத்தவும், மதுபான விடுதி மற்றும் பார் போன்றவற்றை திறக்கவும் மார்ச் 31-ம் தேதி வரை மாநில அரசு தடை விதித்துள்ளது.
Comments