கோடை விடுமுறையையொட்டி சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில் ஏற்பாடு

0 1024

கோடை விடுமுறையையொட்டிச் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல், மே மாதங்களில் வெள்ளி மாலை 6.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7 மணிக்குத் திருநெல்வேலி சென்று சேரும்.

திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல், மே மாதங்களில் ஞாயிறு மாலை ஐந்தேமுக்கால் மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.35 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்.

நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல், மே மாதங்களில் ஞாயிறு இரவு 7.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 9.20 மணிக்குத் தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து ஏப்ரல், மே மாதங்களில் வெள்ளி மாலை 6 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 10 மணிக்குத் திருநெல்வேலி சென்று சேரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments