நெஞ்சுவலியால் ஓடும் ஆட்டோவில் உயிரிழந்த ஓட்டுனர்

0 2527

சென்னை தாம்பரம் அருகே நெஞ்சுவலி காரணமாக ஓடும் ஆட்டோவில் இருந்து சாலையில் விழுந்து ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், சில அடி தூரத்துக்கு ஆட்டோ மட்டும் சென்று நின்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கொராட்டூரில் இருந்து மதுரவாயல் நோக்கி ஆவின் சாலையில் ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் சென்று கொண்டிருந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உயிரிழந்த நிலையில் ஆட்டோவில் இருந்து பிரகாஷ் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது யாரும் இல்லாத ஆட்டோ மட்டும் சில அடி தூரம் சென்று தடுப்பில் மோதி நின்றது.

பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments