கால வரையின்றி மூடப்பட்ட ஈபிள் டவர்
கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாரீசின் மிக முக்கிய சுற்றுலாத் தளமான, ஈபிள் டவர் கால வரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க, உலகின் பல்வேறு முக்கிய சுற்றுலாத்தளங்களும் மூடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் ஈபிள் டவரும் மூடப்படுவதாக, அதனை பராமரிக்கும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஈபிள் டவரை பார்த்து ரசிப்பதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கான பணத்தை, திருப்பியளிப்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
Comments