டெல்லி வன்முறையில் காவலர் கொலை தொடர்பாக 7 பேர் கைது

0 1351

டெல்லி வன்முறையின்போது காவலர், உளவுத்துறை அலுவலர் கொல்லப்பட்டது தொடர்பாக 8 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உளவுத்துறை அலுவலர் அங்கித் சர்மா கொலை வழக்கில் சுந்தர் நகரியைச் சேர்ந்த முகமது ஹசீன் குரேசி என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரது சொந்த ஊர் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் ஆகும். காவலர் ரத்தன்லால் கொலை வழக்கில் சந்த் பாக்கைச் சேர்ந்த சலீம் மாலிக், முகமது ஜலாலுத்தீன், முகமது அயூப், முகமது யூனுஸ், ஆரிப், சலீம்கான் ஆகியோரும், காசியாபாத்தைச் சேர்ந்த முகமது டேனிசும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் வன்முறையின்போது ஆட்களைக் கொன்று கழிவுநீர்க் கால்வாயில் போட்டது தொடர்பாக அங்கித், சுமித், லோகேஷ் சர்மா, பங்கஜ் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments