சென்னை - சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0 1492

சென்னை - சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீசார் தீவிர கண்காணிப்பிலும், சோதனையிலும் ஈடுபட்டனர்.

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு தொலைபேசி தகவலை தொடர்ந்து, ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் இது வெறும் புரளி என தெரிய வந்தது.

மிரட்டல் தொலைபேசி அழைப்பு திருப்போரூரில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க, போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments