கொரானா அச்சுறுத்தல் - திருப்பதி தேவஸ்தானம் ரூ.300 டிக்கெட்டை ரத்து செய்ய முடிவு

0 75771

கொரானா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக, முன்பதிவு செய்த 300 ரூபாய் டிக்கெட்டை ரத்து செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், தரிசனத்திற்காக மே மாதம் வரை 300 ரூபாய் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் அதனை ரத்து செய்து கொள்ளவும், மாற்று தேதியில் டிக்கெட்டை புக் செய்து கொள்ள ஆன்லைனில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் திருப்பதியில், கொரானா அச்சுறுத்தல் மற்றும் நோய் தொற்று பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், காய்ச்சல், தலைவளி, சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பக்தர்கள் யாராக இருந்தாலும் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments