ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைக்கு அரசு தடை

0 4071

கொரானா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து மும்பையில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

13வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் மார்ச் 29ம் தேதி தொடங்கும் நிலையில், மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மோதுகின்றன.

இதனிடையே கொரானா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிர மாநில அமைச்சரவை கூட்டத்தில், ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்களின்றி தொடக்க ஆட்டம் நடைபெறலாம் எனக் கூறப்படும் நிலையில், போட்டி தொடரையே ஒத்திவைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments