இந்திய துறைமுகங்களில் வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் நுழைய தடை

0 1637

கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 31ம் தேதி வரை வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் (cruise ships) இந்திய துறைமுகங்களில் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து சென்னை துறைமுக கழக போக்குவரத்து பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கொரானா அச்சுறுத்தலால், வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள் கப்பல்கள், இந்திய துறைமுகங்களில் நுழைய மார்ச் மாதம் 31ம் தேதி வரை தடை விதிப்பதென்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதலால் எந்த வெளிநாட்டில் இருந்து பயணிகள் கப்பல் வந்தாலும் சென்னை துறைமுகத்தில் 31ம் தேதி வரை நுழைய அனுமதியளிக்கப்பட மாட்டாது எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments