அனைத்து பெண்கள் தபால் அலுவலகம் திறப்பு

0 1653

கர்நாடக மாநிலம் கலாபுராகி பகுதியில் அனைத்து பெண்கள் தபால் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்று தபால் நிலையத்தை திறந்து வைத்தனர். அதிகளவில் பெண்கள் பணியாற்ற வைப்பதே இந்த அலுவலகம் திறக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். சர்வதேச மகளிர் தினத்திற்கு மறுநாள் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் கூறும் போது, எங்களால் சுதந்திரமாக பணிபுரிய முடியும் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். அரசு வேறு சில துறைகளிலும் இதுபோல் பெண்கள் மட்டுமே பணிபுரியும் அலுவலகத்தை அமைத்தால் நல்லது என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments