கண்காணிப்பு ஆணையர் பதவிகள் நியமனம் குறித்து பிரதமர் மோடி மறுபரிசீலனை செய்ய வேண்டும்

0 978

தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகள் நியமனம் குறித்து பிரதமர் மோடி மறு ஆலோசனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. 

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சார்பில் எழுதியுள்ள கடிதத்தில், இந்த பதவிக்கு தேர்வு செய்யும் கமிட்டி உறுப்பினர்களின் பதவி குறித்தும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு சட்டவிதிகளின் படி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளது. இதற்கிடையில் பிரதமர் மோடி தலைமையிலான கமிட்டி தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு சஞ்சய் கோத்தாரி என்பவரை தேர்வு செய்துள்ளது. ஆனால் அவர் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கவே இல்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments