சவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிப்பு.. பாதுகாப்பு அதிகரிப்பு..!

0 1798

சவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டத்து இளவரசருக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் மன்னராக சல்மானும் பட்டத்து இளவரசராக அவர்மகன் முகமது பின் சல்மானும் உள்ளனர்.

இந்நிலையில் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறி மன்னர் சல்மானின் தம்பி அகமது பின் அப்துல்அசீஸ், அகமதின் மகன் முகமது பின் நயீப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளவரசர் இருவரையும் முகமூடி அணிந்த வீரர்கள் விசாரணைக்காக அரசவைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களின் சதித்திட்டத்துக்கு உதவியதாக உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், மூத்த ராணுவ அதிகாரிகள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments