அமைச்சரிடம் செல்போன் பரித்த நபர் கைது

0 1209

புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனின் செல்போனை பறித்துக்கொண்டு ஓடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரைக்காலைச் சேர்ந்த அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் இருக்கும் நாட்களில் கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடந்த 2-ஆம் தேதி இரவு நடைப்பயிற்சி முடிந்து அவர் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாதுகாப்பு அதிகாரியின் கையில் இருந்த அமைச்சரின் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர்.

அப்பகுதி சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் அவர்களைத் தேடி வந்த போலீசார் பாலா என்ற நபரை கைது செய்து செல்போனை கைப்பற்றினர். செந்தில் என்ற மற்றொரு நபரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments