மாற்றுத்திறனாளிகளுக்காக விரைவில் தாழ்தளப் பேருந்து..!

0 1036

மாற்றுத்திறனாளிகளுக்காக விரைவில் சிறப்பு வசதிகளுடன் தாழ்தளப் பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உள்விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான அம்மா நினைவுக் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் 100 கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட இடங்களுக்கு 100 சதவீத மானியத்துடன் செல்ல வகை செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அமர்வு கைப்பந்துப் போட்டி, சக்கர நாற்காலி வாள்வீச்சுப் போட்டி, அமர்ந்து விளையாடும் கபாடிப் போட்டி, உயரம் குறைந்தவர்களுக்கான கபாடிப் போட்டி உள்ளிட்டவற்றில் பிற மாநில வீரர் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments