சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் மேலும் 3பேர் தென்காசியில் சரண்

0 929

சென்னை தேனாம்பேட்டையில், நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தென்காசி நீதிமன்றத்தில் இன்று 3 பேர் சரண் அடைந்தனர்.

அண்ணாசாலையில் சென்ற ஒரு வாகனத்தின் மீது செவ்வாயன்று அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில், மகேஷ் எனும் நபர் மற்றும் கல்லூரி மாணவன் ஆகிய இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

விசாரணையில் புழல் சிறையில் உள்ள புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியின் திட்டப்படி இக்கொலை முயற்சி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிய ரவுடிகள், ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக, நான்கு பேர், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இன்று தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தண்டையார் பேட்டையைச் சேர்ந்த சதிஸ், ஹரீஸ், தமிழ்செல்வன் என்ற செல்வா ஆகிய 3 பேர் சரண் அடைந்தனர். அவர்களை வரும் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரகதீஸ்வரன் உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments