எஸ்பிஐ ஏடிஎம்.மில் பணம் எடுக்க வந்த பெண்களிடம் கைவரிசை

0 1173

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் எஸ்பிஐ ஏடிஎம்.மிற்கு வந்த பெண்களை ஏமாற்றி, அவர்களுடைய வங்கி கணக்கில் பணத்தை எடுத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

அனு என்பவர் தனது தாயாருடன் மகளிர் சுயஉதவி குழு மூலம் கிடைத்த பணத்தை எடுக்க புதிய ஏடிஎம் அட்டையுடன் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பெண், ஏடிஎம் அட்டையை வாங்கி உதவுவது போல நடித்து, பிறகு பணம் வரவில்லை என கூறி, நைசாக உண்மையான ஏடிஎம் அட்டைக்கு பதில் வேறு அட்டையை கொடுத்துள்ளார். இதையறியாமல் அனுவும், தாயாரும் சென்றதும், அதை வைத்து 34 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார்.

பணம் எடுக்கப்பட்ட குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சியடைந்து போலீசில் அனு புகார் அளித்தார். இதன்பேரில் சிசிடிவி காட்சியை கொண்டு விசாரணை நடத்தப்பட்டதில், ஏற்கெனவே 3 பெண்களிடம் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்ததால், அப்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments