தமிழகம், பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 10 பேர் தீவிரவாத அமைப்புகளை உருவாக்க உதவியது கண்டுபிடிப்பு

0 3915

தமிழகம் மற்றும் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 10 பேர், இந்தியாவில் தீவிரவாத அமைப்புகளை உருவாக்க உதவியது தெரியவந்துள்ளது.

தீவிரவாத அமைப்புகளுக்கு சிம்கார்டு உள்ளிட்டவை வாங்கி கொடுத்து உதவிய விவகாரத்தில் தமிழகம் மற்றும் பெங்களூருவில் 10 பேர் கைது செய்யப்பட்டு, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது.

இதில், 4 பேர், மோசடியாக சிம்கார்டு வாங்கி பயன்படுத்தியது மற்றும் தமிழகத்தில் சட்ட விரோத நடவடிக்கைக்கு தமிழக ஐஎஸ்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளரான காஜா மைதீனுக்கு உதவியது கண்டுபிடிக்கப்பட்டது.

பெங்களூருவில் கைதான முகமது ஜெய்ஸ், காஜாமைதீனுக்கு  இந்தியாவில் தீவிரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்க்க உதவியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments