சீருடை பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பான மேல்முறையீடு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

0 1039

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பான மேல்முறையீடு வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீருடைப் பணியாளர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் விதித்த, இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்தது.

அந்த மனு மீதான விசாரணையில், ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே மதிப்பெண்ணை பெற்று தேர்ச்சி அடைந்திருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில், புகார் தொடர்பான முழு விவரங்களையும் பதில் மனுவாக தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை, மார்ச் 26-ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments