அரியானா ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருக்குக் குடியுரிமைக்கான ஆவணங்கள் இல்லை - மாநிலத் தலைமைச் செயலகம்

0 1024

அரியானா ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருக்குக் குடியுரிமைக்கான ஆவணங்கள் இல்லை என அந்த மாநிலத் தலைமைச் செயலகம் பதில் அளித்துள்ளது.

பானிபட்டைச் சேர்ந்த கபூர் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அரியானா ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோரின் குடியுரிமைக்கான சான்றுகளைக் கோரிக் கடிதம் எழுதியிருந்தார். இதற்குத் தலைமைச் செயலகம் அளித்துள்ள பதிலில், ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோரின் குடியுரிமைக்குச் சான்றான ஆவணங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், அமைச்சர்கள் ஆகியோரின் தகவல்கள் தேர்தல் ஆணையத்தில் இருக்கலாம் என்பதால் அதைத் தொடர்புகொண்டு கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு கபூரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments