எரிமலை வெடிப்பால் 6 கி.மீ. உயரத்திற்கு சாம்பல்

0 1152

இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய் கிழமை மவுண்ட் மெராபி எரிமலை வெடித்து சிதறியதில் ஆறு கிலோ மீட்டர் உயரத்திற்கு அடர்த்தியான சாம்பல் எழுந்தது.

இந்தோனேசியாவில் உயிர்ப்புடன் உள்ள நூற்றுக்கணக்கான எரிமலைகளில் ஒன்றான 2,930 மீட்டர் உயரம் கொண்ட மவுண்ட் மெராபி (Mount Merapi) எரிமலை அவ்வபோது வெடித்து சிதறி வருகிறது.

கடந்த செவ்வாய்கிழமை எரிமலை வெடித்ததில், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கரும்புகை சூழ்ந்ததுடன், வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது. எரிமலை வெடிப்பின் போது மழை குறுக்கிட்டதால் லாவா குழம்புகளால் ஏற்படும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments