விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி

0 1347

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்குப்பம் பூமாலை கிராமத்தை சேர்ந்த மகாதேவன் என்பவர், தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிரை காட்டுப்பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக நிலத்தை சுற்றி சட்டவிரோதமாக அரை அடி உயர மின்வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில் அதிகாலை நேரத்தில் அவ்வழியாக சென்ற, அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக மின்வேலியில் கால் சிக்கியதை அடுத்து, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து மின்வேலி வைத்த மகாதேவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments