மார்ச் 6 - சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்..!

0 4366

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் 6ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்ச் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த முகாமில் தனியார்துறையைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த 35 வயதுக்கு உட்பட்டோர் கலந்துகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments