காட்டுயானை தாக்கி வனஊழியர் ஒருவர் உயிரிழப்பு

0 1550

கர்நாடக மாநிலம் கோலார் அருகே காட்டு யானை தாக்கி வனஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

மாலூர் மற்றும் பங்காருபேட்டையில் கடந்த சில தினங்களாக 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிந்துள்ளன. இந்நிலையில் பேட்ரஹள்ளி கிராமத்தில் சுற்றித்திரிந்த யானைகளை காட்டுக்குள் விரட்டி அடிக்க வனஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது பூட்டு முனியப்பன் எனும் வனஊழியர் காட்டு யானைகளை விரட்டிச் செல்லும்போது ஒரு யானை அவரை தும்பிக்கையால் தூக்கி அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த மாலூர் போலீசார் உயிரிழந்த பூட்டு முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments