பணி ஓய்வு பெறும் நாளில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சஸ்பெண்ட்

0 1465

வேலூரில் முறைகேடு புகார் காரணமாக பேரூராட்சிகள் உதவி இயக்குநரை பணி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 26 பேரூராட்சிகள் செயல்படுகின்றன.

இதன் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த திருஞானம், வீட்டு வசதித்திட்டம், கழிவறை கட்டுதல் உள்ளிட்ட திட்டங்களில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

மேலும், திருஞானத்துக்கு தனியார் சொகுசு ஓட்டலில் பிரிவு உபசரிப்பு விழா நடத்த  பேரூராட்சிகளில் தலா  25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த விசாரணையில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டதாக கூறி தமிழக அரசு, திருஞானத்தை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments