பங்குச்சந்தை வீழ்ச்சியால் சிவ நாடார், அசீம் பிரேம்ஜிக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு

0 1308

பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் தொழிலதிபர்களான சிவ நாடார், அசீம் பிரேம்ஜி ஆகியோருக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியால் இந்தியப் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் எச்.சி.எல் நிறுவனப் பங்கு மதிப்பு 12 விழுக்காடும், விப்ரோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 விழுக்காடும் வீழ்ச்சியடைந்தது.

எச்.சி.எல். நிறுவனத்தில் சிவ நாடாருக்கு 60 விழுக்காடும், விப்ரோ நிறுவனத்தில் அசீம் பிரேம்ஜிக்கு 74 விழுக்காடு பங்குகளும் உள்ளன. பங்கு விலை வீழ்ச்சியால் சிவநாடாருக்கு 11 ஆயிரத்து 550 கோடி ரூபாயும், அசீம் பிரேம்ஜிக்குப் பத்தாயிரத்து நூறு கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments